|
அருள்மறையின் திருவசனங்கள் |
|
உங்களுக்கு முன் பல வழிமுறைகள் சென்றுவிட்டன. ஆகவே,
நீங்கள் பூமியில் சுற்றி வந்து இறை வசனங்களைப்
பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
(அல்குர்ஆன்
3 : 137) |
|
|
|
'பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்)
பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள்
கவனித்துப் பாருங்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 6 : 11) |
|
|
|
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து
அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு
என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.
(அல்குர்ஆன் 7 : 84)
|
|
|
|
அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன்
விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக்
கூறுகிறார்கள். இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே
(தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள்.
ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை
(நபியே!) நீர் நோக்குவீராக.
(அல்குர்ஆன் 10 : 39) |
|
|
|
அப்பொழுதும் அவர்கள் அவரைப்
பொய்யரெனவே கூறினார்கள். ஆகவே, நாம் அவரையும், அவருடன்
இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் -
மேலும் அவர்களைப் பூமிக்கு அதிபதிகளாகவும் ஆக்கினோம் -
நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை
மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட
அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர்
கவனிப்பீராக. (அல்குர்ஆன்
10 : 73) |
|
|
|
மெய்யாகவே நாம் ஒவ்வொரு
சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்
ழைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று
போதிக்குமாறு நம் தூதர்களை அனுப்பி வைத்தோம் எனவே அ(ந்த
சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும்
இருக்கிறார்கள் வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில்
இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சற்றுப்பயணம் செய்து,
பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.
(அல்குர்ஆன் 16 : 36)
|
|
|
|
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின்
முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
முடிவு அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும்
நாம் அழித்தோம். (அல்குர்ஆன்
27 : 51) |
|
|
|
''பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து உங்களுக்கு
முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள்
கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர்
முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்'' என்று
(நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்
30 : 42) |
|
|
|
ஆகவே, நாம் அவர்களிடம்
பழிதீர்த்தோம்.எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டு
இருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர்
கவனிப்பீராக!. (அல்குர்ஆன்
43 : 25) |